தென்கொரியாவின் சியோலைத் தளமாகக் கொண்ட ‘டிரான்சிஷனல் ஜஸ்டிஸ் வொர்க்கிங் குரூப்’ (TJWG) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வடகொரியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 117 சதவீதம் அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் நாடு தனது எல்லைகளை முழுவதுமாக மூடியிருந்ததைப் பயன்படுத்தி, கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு தனது அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 60 வழக்குகளில் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக 880 வடகொரிய ஏதிலிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>













