மூன்றாவது ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

Saturday, March 7th, 2026 at 0:40 (SLT)

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் அமெரிக்கா தலையீடு? : மோஜ்தபா காமேனியை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்

Friday, March 6th, 2026 at 9:13 (SLT)

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த தலைமைத்துவத்தைத் தேர்வு செய்வதில் தான் நேரடியாக ஈடுபடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக, காமேனியின் மகனும், அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான மோஜ்தபா காமேனியை (Mojtaba Khamenei) “ஏற்றுக்கொள்ள முடியாதவர்” என்றும், அவர் ஒரு “பலவீனமான நபர்” (Lightweight) என்றும் ட்ரம்ப் வெளிப்படையாகக் விமர்சித்துள்ளார். வெனிசுலாவில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே, ஈரானின் ஆட்சி மாற்றத்திலும் தான் முக்கியப் பங்கு வகிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கு போர் இலங்கை மத்தியஸ்த நிலைப்பாடு : ஜனாதிபதி

Friday, March 6th, 2026 at 9:08 (SLT)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

Friday, March 6th, 2026 at 9:05 (SLT)

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வசம் வந்த ஈரானியக் கப்பல் ‘ஐரிஸ் புஷேர்’: 208 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Friday, March 6th, 2026 at 9:01 (SLT)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகே பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’ (IRIS Bushehr) கப்பலையும், அதில் இருந்த 208 மாலுமிகளையும் இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக உதவி கோரிய இந்தக் கப்பல், கடந்த சில நாட்களாக இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்தது. பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சட்ட விதிகளின்படி மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பணியை மேற்கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு

Thursday, March 5th, 2026 at 10:41 (SLT)

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் போரில் இலக்காகும் ஐரோப்பிய நாடுகள்: நேட்டோ (NATO) படைகள் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தயார் நிலையில்

Thursday, March 5th, 2026 at 10:36 (SLT)

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களுக்கு எதிரான இந்த மோதலில் ஐரோப்பிய நாடுகள் இணைவது “போர் பிரகடனமாக” (Act of War) கருதப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை அழிக்கத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனத் தெரிவித்திருந்த நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டால், தாக்குதல்கள் ஐரோப்பிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் கடந்த 5 நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

Wednesday, March 4th, 2026 at 8:03 (SLT)

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் (04) 5 நாட்கள் ஆகின்றன. கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிருஷ்ணகிரியில் குழந்தை கொலை: திமுக இளைஞரணி செயலாளர் கைது தமிழகத்தை அதிரவைத்த கொடூரம்

Wednesday, March 4th, 2026 at 7:57 (SLT)

கிருஷ்ணகிரியில் இரண்டு வயது அரை குழந்தை கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பேரியநாயகம் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மரணம் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், forensic report வெளிவந்ததும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தையின் உடலில் உள்ளக காயங்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஸ்பெயின் படைத் தளங்களை பயன்படுத்த அனுமதி மறுப்பு

Wednesday, March 4th, 2026 at 7:52 (SLT)

எமது நடவடிக்கைக்கு ஆதரவாக தனது படைத் தளங்களை பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துவிட்டது. பரவாயில்லை எந்த தளங்களையும் பயன்படுத்த நாங்கள் எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. தேவைப்பட்டால் பயன்படுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

லெபனானில் 58,000 இடம்பெயர்ந்தனர்: 50க்கும் மேற்பட்டோர் பலி

Wednesday, March 4th, 2026 at 7:44 (SLT)

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 58,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், லெபனான் முழுவதும் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது

Wednesday, March 4th, 2026 at 7:40 (SLT)

பாதுகாப்பு காரணங்களுக்காக பெஷாவரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் மார்ச் 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி

Wednesday, March 4th, 2026 at 7:34 (SLT)

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொலை

Tuesday, March 3rd, 2026 at 13:09 (SLT)

இராக்கில், பிரபல பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொல்லப்பட்டார்.இராக் நாட்டைச் சேர்ந்தவர் பிரபல மனித மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் யானார் முகமது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காக ஆர்கனைஸேஷன் ஆஃப் வுமன்ஸ் ஃபிரீடம் இன் இராக் எனும் அமைப்பை நடத்தி வந்தார்.

மேலும் வாசிக்க >>>

போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

Tuesday, March 3rd, 2026 at 13:06 (SLT)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) அன்று கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>