2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, April 24th, 2026 at 8:37 (SLT)
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, April 24th, 2026 at 8:23 (SLT)
Hormuz நீரிணை பகுதியில் நீரில் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் எந்த படகாக இருந்தாலும் சிறிய படகுகளாக கூட இருந்தாலும் தயக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, April 24th, 2026 at 8:18 (SLT)
டென்மார்க்கில் அதிகாலையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனுக்கு அருகில் உள்ள கிரிப்ஸ்கோவ் என்ற நகருக்கு அருகே ஹிலேரோட் என்ற இடத்தில் இந்த ரயில் விபத்து நடந்தது. இதில் 2 இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் பலத்த காயமுற்றனர். விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, April 24th, 2026 at 8:15 (SLT)
உக்ரைன் வழியாக ட்ரூஸ்பா குழாய் மூலம் ஸ்லோவேக்கியாவிற்கு மீண்டும் ரஷ்யா எண்ணெய் விநியோகம் மீண்டும் துவங்கி உள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 5 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடம்,உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி, ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
மேலும் வாசிக்க >>>Thursday, April 23rd, 2026 at 7:44 (SLT)
திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஊடாக மோசடியான முறையில் பிறிதொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 23rd, 2026 at 7:38 (SLT)
அமெரிக்க அதிபர் டிரம்ப் காலவரையின்றி போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், ஜலசந்தியை கடக்க முயன்ற 2 கப்பல்களை சிறைபிடித்தது. இது இரு தரப்பு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இப்போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் மறுத்தது. இந்த சூழலில் போர் நிறுத்தம் முடிய சில மணி நேரங்கள் இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 23rd, 2026 at 7:33 (SLT)
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தற்போது முட்டுக்கட்டையில் உள்ள நிலையில், பாகிஸ்தானின் சமரசப் பங்களிப்பை ஈரான் அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று தெரிவித்துள்ளார். இரண்டு வார கால போர்நிறுத்தத்தை (Ceasefire) நீட்டிக்குமாறு பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஈரான் இந்த நேர்மறையான கருத்தை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 22nd, 2026 at 7:14 (SLT)
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்), அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 22nd, 2026 at 7:09 (SLT)
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, இன்னும் சில மணிநேரங்களில் ஈரான் மீது குண்டுமழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகத்தையே அதிரவைக்கும் ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் தூதுவர்களின் அவசரக் கோரிக்கையை ஏற்று, ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தத்தை அவர் நீட்டித்துள்ளார். இருப்பினும், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை (Blockade) தொடர்ந்து நீடிக்கும் என்றும், ஈரான் அரசு ஒரு தெளிவான முடிவுக்கு வரும் வரை இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 22nd, 2026 at 6:59 (SLT)
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தனான் மூடியது. பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளியை மூடியது.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 22nd, 2026 at 6:57 (SLT)
ஜெர்மனியின் மோயர்ஸ் நகரில் உள்ள குருத்வாராவில் நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் அங்கு கூடியிருந்த இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 22nd, 2026 at 6:52 (SLT)
தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, April 21st, 2026 at 23:34 (SLT)
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, April 21st, 2026 at 7:07 (SLT)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, April 21st, 2026 at 7:01 (SLT)
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததால், 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எந்த திட்டமும் இல்லை என ஈரான் கூறி உள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், இரு தரப்பையும் சமாதானப்படுத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும் வாசிக்க >>>