ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்கும் நோக்கில், தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தலேகான் (Taleghan) அணுசக்தி வளாகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த வளாகம், ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் சார்ந்த நுணுக்கமான சோதனைகள் மற்றும் மேம்பட்ட வெடிபொருள் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தத் தளம் தாக்கப்பட்ட நிலையில், ஈரான் மீண்டும் அதனைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததைக் கண்டறிந்ததை அடுத்து, மீண்டும் இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>