ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் வடக்கு பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் உள்ள புக்கன்ஹவுட் (Buggenhout) நகரில் இன்று காலை ஒரு கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கற்றல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறப்புப் பள்ளிக்கு (Special Needs School) மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக மினி பேருந்து ஒன்று, அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த மிகக் கொடூரமான விபத்தில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வாசிக்க >>>
















