தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக ஆதரவாளர்கள் சதி

Sunday, May 31st, 2026 at 10:49 (SLT)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்துள்ள சூழலில், தவெக அரசுக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக ஆதரவாளர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும் தவெக அமைச்சருமான கே.ஜி. அருண் ராஜ் (K.G. Arunraj) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் தொடக்ககால மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அதிரடி நிர்வாக மாறுதல்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை ஏவிவிட்டு இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வலி.வடக்கில் காணிகளை விடுவிப்போம் ஆனால் கால எல்லையை கூற முடியாது :க. இளங்குமரன்

Sunday, May 31st, 2026 at 10:45 (SLT)

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அது தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.யாழில். இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

Sunday, May 31st, 2026 at 10:40 (SLT)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம் (பதவியா மற்றும் ஹொரோவபொத்தானை), வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதோடு, பின்தங்கிய சமூகங்களுக்கு தரமான கண் சுகாதார சேவைகளின் அணுகலை மேம்படுத்துவதாகும்.

மேலும் வாசிக்க >>>

அதிபர் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருக்கிறார்: அதிபரின் மருத்துவர் அறிக்கை

Sunday, May 31st, 2026 at 10:37 (SLT)

அதிபர் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாகவும், பதவி வகிப்பதற்கான முழு தகுதியுடன் இருப்பதாகவும் அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Sunday, May 31st, 2026 at 10:32 (SLT)

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

Sunday, May 31st, 2026 at 10:25 (SLT)

ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்

Saturday, May 30th, 2026 at 6:39 (SLT)

பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பள்ளிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி,தமிழ்நாடு செய்திகள்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன் நிறுவன ராக்கெட் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியது

Saturday, May 30th, 2026 at 6:32 (SLT)

அமெரிக்காவில் புளூ ஆரிஜன் நிறுவனத்தின் நியூ கிளென் ராக்கெட் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜெப் பெசோசின் புளூ ஆர்ஜின் நிறுவனம் அதிநவீன விண்கலங்களை உருவாக்கி வருகிறது.இந்நிலையில், புளூ ஆரிஜினின் மிகவும் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான நியூ கிளன் ராக்கெட் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் ஐஎம்எப் ஒப்புதல்

Friday, May 29th, 2026 at 7:23 (SLT)

இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் தவணை வழங்க சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.23044 கோடி) நிதி வசதிக்கு கடந்த 2023 மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கென்யாவில் பள்ளி மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி: 79 பேர் காயம்

Friday, May 29th, 2026 at 7:20 (SLT)

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவிகள் அச்சத்தில், அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

மேலும் வாசிக்க >>>

ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பணிந்தாரா? சோனியா, ராகுலுடன் விஜய் சந்திப்பு தவிர்ப்பு: டெல்லியில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

Friday, May 29th, 2026 at 7:15 (SLT)

காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரது சந்திப்பை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக முதல்வர் விஜய் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு மிரட்டல் விடுத்ததே இந்த சந்திப்பு ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.

மேலும் வாசிக்க >>>

குதிரை பேரத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம்: அன்புமணி பேட்டி

Thursday, May 28th, 2026 at 6:04 (SLT)

புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். மக்கள் விருப்பத்துக்கு எதிராக எம்எல்ஏக்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

மேலும் வாசிக்க >>>

சூலூர் சிறுமி பலாத்கார கொலை 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Thursday, May 28th, 2026 at 6:01 (SLT)

கோவை அடுத்த சூலூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த நாகையை சேர்ந்த கார்த்தி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சிறுமியை கொலை செய்த விவரத்தை தனது நண்பர் மோகனிடம் தெரிவித்தார். ஆனால் அவர் போலீசாரிடம் இதனை தெரிவிக்காமல் மறைத்தார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் புதிய ராணுவ தளபதி பலி

Thursday, May 28th, 2026 at 5:06 (SLT)

காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் ஹமாஸ் புதிய ராணுவ தளபதி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசா நகரை குறித்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 12 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ரூ.2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆய்வு மையம்: நாசா 3 கட்ட திட்டம் வெளியீடு

Thursday, May 28th, 2026 at 5:01 (SLT)

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக தங்கி ஆய்வு செய்வதற்கான பிரமாண்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காக நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க நாசா முடிவு செய்துள்ளது. இதனை 3 கட்டங்களாக நிறைவு செய்வதற்கான புதிய திட்டத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆய்வு மையம் 3 கட்டமாக அமைத்து முடிக்கப்படும் என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>