ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.
மேலும் வாசிக்க >>>Friday, May 22nd, 2026 at 11:52 (SLT)
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.
மேலும் வாசிக்க >>>Friday, May 22nd, 2026 at 11:46 (SLT)
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது.
மேலும் வாசிக்க >>>Friday, May 22nd, 2026 at 7:07 (SLT)
நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, May 22nd, 2026 at 7:03 (SLT)
மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைக்கு எச்-1பி விசாதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய பொறியாளர்களும், சாப்ட்வேர் டெவலப்பர்களும் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க உதவினர். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை காரணமாக அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற பலரும் முயல்கின்றனர். அந்த கனவில் அங்கேயே வீடு வாங்கினர். குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பலரும் குழந்தையையும் பெற்றுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, May 22nd, 2026 at 6:56 (SLT)
ரஷ்யாவின் மற்றொரு முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்யாவிற்குள் 800கி.மீக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள சிஸ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 21st, 2026 at 10:31 (SLT)
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இதுவரை 33 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 21st, 2026 at 10:27 (SLT)
உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 21st, 2026 at 7:22 (SLT)
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் நிலவி வரும் தீவிர வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான ‘பிபிசி’ (BBC) வெளியிட்டுள்ள களஆய்வு அறிக்கை உலகையே அதிரவைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருவதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றிப் பெற்ற தாயும் தந்தையும் தங்களது பச்சிளம் குழந்தைகளை விற்கும் கொடூரமான உறைபனி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள ஃபிரோஸ்கோ என்ற நகரின் வீதிகளில் தினக்கூலி வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆண்கள் காத்துக் கிடக்கும் அவலமும், உடைந்த ரொட்டித் துண்டுகளுக்காக மனிதர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, May 21st, 2026 at 7:14 (SLT)
பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 10:36 (SLT)
அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 10:32 (SLT)
களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08 பஸ் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 10:30 (SLT)
உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பற்றரிகளுடன் மூன்று சீனப் பிரஜைகளைக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 10:27 (SLT)
மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 10:24 (SLT)
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 20th, 2026 at 7:14 (SLT)
எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைப்படி, இருக்கையில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது ஏஐ புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களும் வெள்ளை துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இணையத்தில் பதிலடி கொடுக்கப்பட்டன.
மேலும் வாசிக்க >>>