மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) திறப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளில் பிரான்ஸ் பங்கேற்காது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த முக்கிய கடல்வழிப் பாதையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க நேட்டோ (NATO) நாடுகளின் உதவியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ் இந்தப் போரில் ஒரு தரப்பாக இல்லை என்றும், தற்போதைய சூழலில் தனது கடற்படையை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>