விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, March 18th, 2026 at 10:24 (SLT)
விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, March 18th, 2026 at 6:33 (SLT)
லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, March 18th, 2026 at 6:27 (SLT)
அரசாங்கம் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் இப்போது பொய்யென நிரூபனமாகி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, March 18th, 2026 at 6:20 (SLT)
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) திறப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளில் பிரான்ஸ் பங்கேற்காது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த முக்கிய கடல்வழிப் பாதையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க நேட்டோ (NATO) நாடுகளின் உதவியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ் இந்தப் போரில் ஒரு தரப்பாக இல்லை என்றும், தற்போதைய சூழலில் தனது கடற்படையை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, March 18th, 2026 at 6:15 (SLT)
மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கும் உதவி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை நேட்டோ உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தங்கள் நாட்டுச் சட்ட திட்டங்களைக் காரணம் காட்டி போர் கப்பல்களை அனுப்ப மறுத்துவிட்டன. இதனால் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நாங்களே உலகிலேயே வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:36 (SLT)
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:33 (SLT)
இவ்வருடம் கடந்த 3 மாத காலப்பபகுதிக்குள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரி்வித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:29 (SLT)
கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:24 (SLT)
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:20 (SLT)
ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, March 17th, 2026 at 7:16 (SLT)
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, March 16th, 2026 at 8:36 (SLT)
நாட்டில் QRமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்,நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில்,எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, March 16th, 2026 at 8:33 (SLT)
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, March 16th, 2026 at 8:29 (SLT)
நாட்டிலுள்ள முன் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, March 16th, 2026 at 6:27 (SLT)
ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். ஈரான் ஒரு உடன்படிக்கையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்பதால் அதற்குத் தாம் இணங்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.
மேலும் வாசிக்க >>>