கோப்பாயில் உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Tuesday, May 5th, 2026 at 9:01 (SLT)

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 108 தொகுதிகளில் த.வெ.க அமோக வெற்றி

Tuesday, May 5th, 2026 at 8:58 (SLT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் : ட்ரம்ப்

Tuesday, May 5th, 2026 at 8:52 (SLT)

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி பொறுப்பு ஆளுநருக்கு தவெக சார்பில் மின்னஞ்சல்

Tuesday, May 5th, 2026 at 8:47 (SLT)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு தவெக சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை விடுவிக்க அமெரிக்கா அவதானம்

Monday, May 4th, 2026 at 7:19 (SLT)

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் சைபர் மோசடி: வெளிநாட்டினர் 130 பேர் கைது

Monday, May 4th, 2026 at 7:15 (SLT)

இலங்கையில் இணையம் வழி மோசடிச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொழும்பின் புறநகர்ப் பகுதியான தலங்கமவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், 37 சீன நாட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரியும்: வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Monday, May 4th, 2026 at 7:13 (SLT)

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னணி நிலவரம் காலை10 மணிக்கு தொகுதி வாரியாக தெரிய வரும். வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.

மேலும் வாசிக்க >>>

30 நாளில் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு ஈரானின் புதிய போர் நிறுத்த திட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலனை

Monday, May 4th, 2026 at 7:08 (SLT)

அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் கடும் இழுபறி நிலை நிலவி வருகிறது. ஈரானின் முந்தைய திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்த நிலையில், புதிதாக 14 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளது. இந்த புதிய திட்டம் அமெரிக்காவின் 9 அம்ச திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாக ஈரானின் தஸ்னிம், பார்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

34 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவன செயல்பாடுகள் நிறுத்தம்

Sunday, May 3rd, 2026 at 9:50 (SLT)

அமெரிக்காவில் மிக குறைந்த கட்டணச் சலுகைகள் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது மஞ்சள் நிற விமானங்களை கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இயக்கியது. சுமார் 17ஆயிரம் பேருக்கு நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

மேலும் வாசிக்க >>>

மற்றுமொரு எரிபொருள் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

Sunday, May 3rd, 2026 at 9:46 (SLT)

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“எம்.டி. யுரேகா” (MT Eureka) எனும் பெயருடைய இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சோமாலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் யேமன் கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹபராதுவவில் மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

Sunday, May 3rd, 2026 at 9:43 (SLT)

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Saturday, May 2nd, 2026 at 9:36 (SLT)

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Saturday, May 2nd, 2026 at 9:33 (SLT)

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் : ஊரவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

Saturday, May 2nd, 2026 at 9:28 (SLT)

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த கடற்கொள்ளை கும்பலுக்கு எதிராக பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , பலாலி பொலிசாரிடம் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐரோப்பிய கார்களுக்கு 25% வரி விதித்த டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் மீது குற்றச்சாட்டு

Saturday, May 2nd, 2026 at 5:47 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது 25 சதவீத இறக்குமதி வரி (Tariffs) விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றும், அமெரிக்கப் பொருட்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு இணங்கவில்லை; எனவே அமெரிக்கத் தொழிலாளர்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம்” என்று டிரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>