முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 11 பேர் உயிரிழப்பு : மூவர் மாயம்

Thursday, June 4th, 2026 at 7:30 (SLT)

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஏலியனை ஆய்வு செய்த நாசாவின் விண்கலம் திடீரெனச் செயலிழந்துள்ளதாகத் தகவல்

Thursday, June 4th, 2026 at 7:25 (SLT)

செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில் இருந்து எந்தவொரு தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், குறித்த ஆய்வு விண்கலம் நிரந்தரமாகச் செயலிழந்துள்ளது என்று நாசா சற்று முன்னர் அறிவித்துப் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. காரணம் கடைசியாக இந்த ஆய்வு விண்கலம், 3I/ATLAS என்ற ஒரு அன்னிய விண்கல்லை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிரோன்கள் மூலம் ஈரான் அதிரடி குவைத் ஏர்போர்ட்டில் தாக்குதல்: இந்தியப் பயணி பலி பலர் காயம்

Thursday, June 4th, 2026 at 7:18 (SLT)

ஈரான் மற்றும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்திக்கொண்ட நிலையில் குவைத் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இந்திய பயணி பலியானார். ஈரான் -இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் ஈரானும், அமெரிக்காவும் ஒன்றின்மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்தன. இந்த தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களில் குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து வர்த்தக விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதாக குவைத் நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக தங்கி இருந்து அமெரிக்காவில் லாரி டிரைவராக பணியாற்றிய 30 இந்தியர்கள் கைது

Wednesday, June 3rd, 2026 at 7:51 (SLT)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து லாரி ஓட்டுனர்களாக வேலை செய்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவின் யூமா பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் ஆபரேஷன் செக்மேட் எனும் நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவில் வணிக வாகனங்களை இயக்கும் சட்டவிரோத நபர்களை கண்டறிந்து கைது செய்தனர். இதில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 36 பேர் கனரக லாரிகளை ஓட்டி வந்ததும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட 36 சட்டவிரோத லாரி ஓட்டுனர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

மேலும் வாசிக்க >>>

குவைத் மீது ஈரான் கடும் தாக்குதல்: ட்ரோன்கள், ஏவுகணைகள் மழை போலப் பொழிந்தன

Wednesday, June 3rd, 2026 at 7:42 (SLT)

மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர்ச் சூழலுக்கு மத்தியில், குவைத் நாட்டின் மீது ஏவப்பட்ட அடுத்தடுத்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (ட்ரோன்) தாக்குதல்களைத் தங்களது நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்துள்ளதாகக் குவைத் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குவைத் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘குனா’ (KUNA) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தாக்குதல்கள் எந்த திசையிலிருந்து அல்லது எந்த நாட்டிலிருந்து ஏவப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை ராணுவம் உடனடியாக வெளியிடவில்லை.

மேலும் வாசிக்க >>>

மேகதாது விவகாரம்: கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

Tuesday, June 2nd, 2026 at 8:04 (SLT)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய சமன்படுத்தும் நீர்த்தேக்கத்தை (Mekedatu Dam) கட்டுவதற்குப் பூமி பூஜை நடத்தப் போவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “தமிழகத்தின் நதிநீர் உரிமைகளில் தவெக அரசு எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி நதிநீர் நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

Tuesday, June 2nd, 2026 at 7:58 (SLT)

ஈரானில் உள்ள ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயன்று வரும் நிலையில் இரு நாடுகளும் ஒன்றன்மீது ஒன்று தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கடல் பகுதியில் இயங்கிக்கொண்டு இருந்த அமெரிக்காவின் எம்க்யூ-1 டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

மேலும் வாசிக்க >>>

திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் இந்திய வம்சாவளி விமானி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: மணப்பெண் உயிர் தப்பினார்

Tuesday, June 2nd, 2026 at 7:54 (SLT)

திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி விமானி டேவ் பிஜி பரிதாபமாக பலியானார். மணப்பெண் ஜெஸ்னி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் டேவ் பிஜி. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்டா ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றினார். இவருக்கும் இவரது காதலி ஜெஸ்னிக்கும் டாவ்சன் கவுண்டியில் உள்ள டாவ்சன்வில்லி அருகே கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என 400 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் வாசிக்க >>>

தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி விபத்து : 6 பேர் பலி

Monday, June 1st, 2026 at 9:38 (SLT)

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நேபாள பிரதமர் பேச்சால் பரபரப்பு இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது

Monday, June 1st, 2026 at 9:34 (SLT)

நேபாள நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா கூறியதாவது: நான் பிரதமரான பிறகு சமீபத்தில் அறிந்த உண்மையை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியா, நேபாளத்தின் நிலங்களை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், நேபாளமும் பல இடங்களில் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் முடிவாகும் நிலையில் உள்ளது

Monday, June 1st, 2026 at 9:29 (SLT)

அமெரிக்காவும் ஈரானும் மிகச்சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாக கூறியிருக்கும் அதிபர் டிரம்ப், அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என ஈரான் வாக்குறுதி தந்திருப்பதாக கூறி உள்ளார். பாக்ஸ் நியூஸ் சேனலில் தனது மருமகள் லாரா டிரம்புக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அதில் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது:

மேலும் வாசிக்க >>>

மியான்மரில் வெடி விபத்தில் 45 பேர் பலி

Monday, June 1st, 2026 at 9:24 (SLT)

வடகிழக்கு மியான்மரில் நாம்காம் நகராட்சியில் உள்ள காங்டப் கிராமத்தில் நேற்று பிற்பகலில் ஒரு கட்டிடம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கு சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் 45 பேர் பலியாகினர்.

மேலும் வாசிக்க >>>

தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக ஆதரவாளர்கள் சதி

Sunday, May 31st, 2026 at 10:49 (SLT)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்துள்ள சூழலில், தவெக அரசுக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக ஆதரவாளர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும் தவெக அமைச்சருமான கே.ஜி. அருண் ராஜ் (K.G. Arunraj) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் தொடக்ககால மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அதிரடி நிர்வாக மாறுதல்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை ஏவிவிட்டு இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வலி.வடக்கில் காணிகளை விடுவிப்போம் ஆனால் கால எல்லையை கூற முடியாது :க. இளங்குமரன்

Sunday, May 31st, 2026 at 10:45 (SLT)

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அது தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.யாழில். இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

Sunday, May 31st, 2026 at 10:40 (SLT)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம் (பதவியா மற்றும் ஹொரோவபொத்தானை), வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதோடு, பின்தங்கிய சமூகங்களுக்கு தரமான கண் சுகாதார சேவைகளின் அணுகலை மேம்படுத்துவதாகும்.

மேலும் வாசிக்க >>>