இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும்.
மேலும் வாசிக்க >>>Friday, May 1st, 2026 at 7:30 (SLT)
இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும்.
மேலும் வாசிக்க >>>Friday, May 1st, 2026 at 7:25 (SLT)
தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 1st, 2026 at 7:19 (SLT)
தெற்கு லண்டனின் க்ராய்டன் (Croydon) பகுதியில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. கடையினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த பொருட்களைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றது. அப்போது கடையின் உரிமையாளரான 42 வயது பெண்மணி, திருடர்களைத் தடுத்து நிறுத்த கடையின் வாசலுக்கு ஓடி வந்துள்ளார். ஆனால், சிறிதும் இரக்கமில்லாத அந்தத் திருடர்கள், தாங்கள் வந்த காரை வேகமாக இயக்கி அந்தப் பெண் மீது நேருக்கு நேராக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றனர்.
மேலும் வாசிக்க >>>Friday, May 1st, 2026 at 7:13 (SLT)
தொடர் மிரட்டலால் அதிருப்தி அடைந்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா இல்லாத எதிர்காலம் உருவாக்கப்படும் என்று எச்சரித்தார். மேற்காசியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் போர்நிறுத்தத்தை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பரந்த ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை ஒரு தேசிய சொத்தாக பாதுகாக்கும் என்று அந்நாட்டின் உச்ச தலைவர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 30th, 2026 at 10:32 (SLT)
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >>>Thursday, April 30th, 2026 at 10:28 (SLT)
வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைத் திருடனிடமிருந்து பெற்று, அவற்றை மறைத்து வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த குறித்த கான்ஸ்டபிளை, நேற்றுப் புதன்கிழமை (29) மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 30th, 2026 at 10:25 (SLT)
பெண் மருத்துவர்கள் குளிப்பதைப் பதுங்கியிருந்து இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவரை நாரஹேன்பிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 30th, 2026 at 7:25 (SLT)
மேற்கு ஆசியா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி பாகிஸ்தானில் நடக்கவிருந்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து ஆனது. மத்திய கிழக்கில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முன்வைத்துள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக அமெரிக்கா ஈரானுக்கு விதித்த தடைகளை நீக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த நிலையில் ஈரான் விரைவில் விவேகமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 30th, 2026 at 7:17 (SLT)
Wednesday, April 29th, 2026 at 8:02 (SLT)
தென்கொரியாவின் சியோலைத் தளமாகக் கொண்ட ‘டிரான்சிஷனல் ஜஸ்டிஸ் வொர்க்கிங் குரூப்’ (TJWG) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வடகொரியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 117 சதவீதம் அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் நாடு தனது எல்லைகளை முழுவதுமாக மூடியிருந்ததைப் பயன்படுத்தி, கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு தனது அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 60 வழக்குகளில் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக 880 வடகொரிய ஏதிலிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 29th, 2026 at 7:55 (SLT)
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வாவில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதியும் ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளியுமான யூசுப் அப்ரிடி சுட்டு கொல்லப்பட்டார். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்பவர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 29th, 2026 at 7:49 (SLT)
இந்தோனேஷியாவில் ஜகார்த்தா நகருக்கு வெளியே பெகாசிதிமூர் நிலையத்திற்கு வெளியே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனத்தின் மீது பயணிகள் ரயில் மோதியது. அந்த பாதையில் வந்த மற்றொரு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 29th, 2026 at 7:44 (SLT)
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்புடைய பல நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் வாசிக்க >>>Tuesday, April 28th, 2026 at 7:04 (SLT)
கனடாவில் சீக்கிய முதியவர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவின் உட்ஸ்டாக் நகரில் கடந்த 22ம் தேதி சீக்கிய முதியவர் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகின்றது. அப்போது அவரது அருகில் வந்த இளைஞர் ஒருவர், அவரை தள்ளிவிட்டுள்ளார். அவரது இன அடையாளத்தை அடிப்படையாக கொண்டு அவரை இனவெறி சார்ந்த கருத்துக்களையும் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார். அவரை என் நாட்டை விட்டு வெளியேறு என்றும் கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, April 28th, 2026 at 6:57 (SLT)
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஈரான் புதிய சமாதானத் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் தூதர்கள் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. இந்தப் புதிய ‘இரண்டு கட்டத் திட்டத்தின்’படி (Two-stage plan), உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க ஈரான் முன்வந்துள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா முழுமையாக நீக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >>>