பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது : தமிழக முதலமைச்சர்

Monday, April 7th, 2025 at 12:25 (SLT)

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு : இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

Monday, April 7th, 2025 at 12:22 (SLT)

கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த ஒரு சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாமல் எம்.பி CIDயில் முன்னிலையில்

Monday, April 7th, 2025 at 12:20 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.


சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பொலிஸார்

Monday, April 7th, 2025 at 12:18 (SLT)

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே மாதம் 8 ஆம் திகதி வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது பாதாள உலகக்குழுவுக்கு துணைபோகும் முப்படையினர் பணிநீக்கம் : அமைச்சர் ஆனந்த விஜேபால

Monday, April 7th, 2025 at 6:09 (SLT)

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு: விசாரணைக்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் மேலும் இரு பொலிஸார் பணிநீக்கம்

Monday, April 7th, 2025 at 6:04 (SLT)

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நோயாளர்களின் நலன் கருதி நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் : சுகாதார அமைச்சர்

Monday, April 7th, 2025 at 6:01 (SLT)

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அநுராதபுரத்துக்கு இன்று மோடி விஜயம்

Sunday, April 6th, 2025 at 8:18 (SLT)

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்காக இன்று அநுராதபுரத்தில் சிறப்பு வாகனத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பிரதமர் மோடி வட,கிழக்கு தமிழ்த் தலைவர்களிடம் தெரிவிப்பு

Sunday, April 6th, 2025 at 8:12 (SLT)

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்தவுடன் சட்ட திருத்தமொன்றை மேற்கொண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த வட,கிழக்கு தமிழ்த் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சம்பந்தன், மாவைக்கு பிரதமர் மோடி அனுதாபம் தமிழ்த் தலைவர்களுக்கும் அறிவுரை

Sunday, April 6th, 2025 at 8:05 (SLT)

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், அவரைச் சந்தித்த வடக்கு,கிழக்கு தமிழ்த் தலைவர்களுக்கு அறிவுரையொன்றையும் வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு

Sunday, April 6th, 2025 at 8:00 (SLT)

இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் தீ விபத்துராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் தீ விபத்து

Sunday, April 6th, 2025 at 6:22 (SLT)

ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த அரங்கில் விழா நடைபெற்றுகொண்டிருக்கின்ற போதே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இந்தியப்பிரதமரின் வருகை புதிய அத்தியாயத்தின் தொடக்கம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் : அலி சப்ரி

Sunday, April 6th, 2025 at 6:17 (SLT)

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் காண்பிக்கிறது. நீண்ட காலமாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. இந்நிலையில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு அத்தகைய அநாவசியமான அச்சங்கள் களையப்படவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Saturday, April 5th, 2025 at 8:23 (SLT)

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

Saturday, April 5th, 2025 at 8:21 (SLT)

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது.

மேலும் வாசிக்க >>>