எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

March 30th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் இன்றைய காலநிலை

March 30th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசப்பந்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு சிஜடி அழைப்பு

March 30th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை முன்னெடுப்பதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் : ஜனாதிபதி

March 30th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

March 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது

March 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலைமன்னாரில் 124 கிலோ கேரள கஞ்சா மீட்பு

March 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோடியின் விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் விசேட அறிவிப்பு

March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இதன்போது எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,697 மீனவர்கள் மீட்பு: இந்திய மத்திய அரசு

March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்வு : 350 பேர் படுகாயம்

March 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

March 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

March 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்திவைக்க “ரிட் மனு“ தாக்கல்

March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கு நடத்தப்பட உள்ள தேர்தலை இடை நிறுத்திவைக்கும் படி ‘ரிட் மனு ‘ ஒன்று தாக்கல் செய்யப்படுள்ளது.எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள சுயேட்சைக்குழு ஒன்றின் தலைவரான ஜே.எம். ஜயரத்ன என்பவரே மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button