புலிகள் இயக்கத்துக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டின் மீது கூட்டமைப்பு உறுப்பினர் கனகரட்னம் நீதிமன்றத்தில் ஆஜர்

வன்னியில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளை கைப்பற்றப்படாத பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுடன் இருக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலி பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததுடன் பல்வேறு குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் இரகசிய பொலிஸார் நேற்று  கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

நேற்றுவிசாரணைக்காக பிரதம நீதவான் நிஷாந்த ஹபுவாரச்சி முன்னிலையில் சந்தேகத்திற்குரிய மேற்படி எம். பியை ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார், அவசர காலச்சட்டத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோர்களுள் கனகரத்தினம் எம். பியும் இருந்துள்ளார். அங்கு கடமையிலிருந்த விசேட விசாரணைக் குழுவினராலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எல். ரி. ரி. ஈ. பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் இவருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து மேற்படி எம். பிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவி பெற்றுக்கொடுத்தல் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் வாசகங்கள் மற்றும் கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடல் ஆகிய காரணங்களுக்கு அமைய கடந்த மே 21 ஆம் திகதி வவுனியாவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் மே மாதம் 21 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடுத்து வைத்தல் உத்தரவுக்கமைய இரகசியப் பொலிஸாரால் சதாசிவம் எம். பி. தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கைகள் இன்னும் முடிவுறாமல் உள்ளதால் சந்தேக நபரை மேலும் தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமென்பதால் அவரை மீண்டும் தங்களது பொறுப்பில் விடுமாறு, இரகசியப் பொலிஸ் சார்ஜண்ட் வாசல விஜேரட்ண குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியாவளை மூன்றாம் இலக்க வாட்டில் வசிக்கும் சதாசிவம் கனகரத்தினம் எம்.

பியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியவேளை பிரதம நீதவான் ஹப்பு வாரச்சி தொடுத்த கேள்விக்கு விடைய ளிக்கும் போது கனகரத்தினம் எம்.பி. தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருப்பதற்கு தமக்குப் பிரச்சினையில்லையெனக் கூறினார். உணவு மற்றும் சுகாதார வசதிகளும் தமக் குக் கிடைப்பதாக சந்தேக நபர் நீதிமன்ற த்தில் மேலும் கூறினார்.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பிலான தடுத்து வைத்தல் உத்தரவின் பிரதியொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த இரகசியப் பொலிஸார் மே மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட முடியுதென்பதால் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை மீண்டும் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கு மாறு கேட்டுக் கொண்டார்.இதனை ஏற்றுக்கொண்ட பிரதம நீதவான் நிசாந்த ஹப்புஆரச்சி சந்தேக நபரை விசாரி த்து இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப் பதற்கும் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்குமா றும் உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply