அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம்

அரச ஊழியர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான விஷேட வேலைத் திட்டம் ஒன்றை அரச மொழித் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கிணங்க தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களிலிருந்து 60 அரச ஊழியர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன. அரச நிறுனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தமிழ் மொழி மூலம் கடமையாற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி வழங்கப்படும் அரச ஊழியர்களை மீண்டும் அவர்களது வேலைகளில் ஈடுபடுத்துவதுடன் அந்த நிறுவனங்களிலுள்ள ஏனைய ஊழியர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply