துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரசேத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உடவலவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் 25 வயதுடைய உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடவலவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply