மோடியின் விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் விசேட அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இதன்போது எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

நேற்று (28) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் இந்த விஜயத்தின் போது சம்பூர் சூரிய சக்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 2024 டிசம்பரில் புது தில்லிக்கு அவரது முதல் வெளிநாட்டுப் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதேபோன்று ஜனாதிபதி திசாநாயக்கவால் விருந்தளிக்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய பிரதமர் மோடி இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தங்கள் இருதரப்பு உறவுகளில் இணைக்கும் முக்கியத்துவத்தை இந்த விஜயம் பிரதிபலிக்கின்றது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply