துப்பாக்கி- ரவைகளுடன் முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் கைது
அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், ரி-56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (31) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் ஓய்வு பெற்ற முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply