தெவிநுவர துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரி உட்பட இருவர் கைது
தெவிநுவர பகுதியில் விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (07) கந்தர பொலிஸ் நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன் ஆஜரான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய கந்தர மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி , தெவிநுவர விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply