வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் 

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார்.

அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியல் அமைப்பு, தமிழ் மக்களுக்கு இவ் அரசு என்ன செய்துள்ளது என்பதனை பற்றி நான் கேட்கின்றுன். முடிந்தால் நீங்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கேள்விகளை கேளுக்கள் என்று மேலும் சவால்விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் திங்கட்கிழமை (07) மாலை மண்டூர் கணேசபுரம், கண்ணகி விளையாட்டுக் கழக மைதான அரங்கில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply