முதலீட்டு வலயங்களூடாக வடக்கில் 16,000 பேருக்கு தொழில் வாய்ப்பு

Saturday, April 5th, 2025 at 8:16 (SLT)

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில் வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார் : இன்று அரச மரியாதை

Saturday, April 5th, 2025 at 8:12 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார்.

மேலும் வாசிக்க >>>

டொரொண்டோவில் நபர் ஒருவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட சிறுமி

Saturday, April 5th, 2025 at 6:20 (SLT)

டொரொண்டோவில் வீடற்ற நபர் ஒருவரை கொலை செய்ததாக சிறுமியொருவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். வீடற்றவரான 59 வயதான கென்னத் லீ என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலின் ஊழல் ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்தால் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் : பந்துல குணவர்த்தன

Friday, April 4th, 2025 at 8:32 (SLT)

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் அரசாங்கத்துக்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேநேரம் நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளித்துள்ள விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகுமென முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்

Friday, April 4th, 2025 at 7:09 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை 

Friday, April 4th, 2025 at 7:04 (SLT)

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி : ட்ரம்ப் தீர்மானம்

Thursday, April 3rd, 2025 at 7:27 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிப்பதற்னகான நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இது அமெரிக்கா மீது இலங்கை விதித்த 88 சதவீத வரிகள் மற்றும் வர்த்தக தடைகளுக்கு பதில் நடவடிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Thursday, April 3rd, 2025 at 6:56 (SLT)

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாளை இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Thursday, April 3rd, 2025 at 5:22 (SLT)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனிக்கிழமை கொழும்பிலிருந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர் மோடி, வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று

Thursday, April 3rd, 2025 at 5:19 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று வியாழக்கிழமை கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது. ‘தொலைதூரம் காண்போம் : அணி திரள்வோம் : எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று மதியம் 1 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் : 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு

Thursday, April 3rd, 2025 at 5:10 (SLT)

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப்பலில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நோரோ என்ற வைரஸ் பரவியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Wednesday, April 2nd, 2025 at 10:20 (SLT)

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்

Wednesday, April 2nd, 2025 at 10:17 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி : அரசாங்கத்தின் புதிய திட்டம் அறிவிப்பு

Wednesday, April 2nd, 2025 at 10:13 (SLT)

இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

Wednesday, April 2nd, 2025 at 10:10 (SLT)

அம்பாறை – இறக்காமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, சாவாறு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி மாலை குறித்த மீனவர், நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

மேலும் வாசிக்க >>>