மாகாணசபை நிர்வாக முறைமை அரசினால் ஏற்பு நடைமுறைப்படுத்துவதில் உறுதி

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை நிர்வாக முறைமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே, அதனை வடக்கு, கிழக்கில் நடை முறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளதென்று அமைச்சர் தெரிவித்தார்.

13வது திருத்தம் அரசியல மைப்பின் ஒரு பகுதியாகும். அதனைப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதில் அரசாங்கம் உறுதியான நிலை ப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.வாராந்த அமைச் சரவைத் தீர்மான ங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, மாகாண சபை நிர்வாக முறையில், மத்திய அரசு, மாகாண அரசுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும், ஒத்தியங்கு அதிகாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சில மாகாண சபைகள் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்தாமல் உள்ளன.” என்று தெரிவித்த அமைச்சர், உலகில் ஆட்சி மாத்திரமின்றி சகல போக்குகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாகித்தான் வருகின்றன என்று தெரிவித்தார்.

‘காணி விடயத்தில் பிரச்சினை இருக்குமென நான் நினைக்கவில்லை. முன்பு யுத்தச் சூழ்நிலையில் பேச்சு நடந்தது. இப்போது அவ்வாறில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே 13வது திருத்தத்திற்கு எதிராகச் கதைக்கின்றார்களே! என்ற கேள்விக்கே அமைச்சர் மெற்கண்ட விளக்கத்தை அளித்தார். வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரவர் விருப்பமாகுமென்று தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஸ்திரமானது என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply