கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கும் திட்டமில்லை

கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கும் திட்டங்கள் எதுவுமில்லை என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்திருப்பதனை போன்று கடற்படை முகாமோ அல்லது வேறும் எந்தவொரு கட்டடத்தையோ அமைக்கும் திட்டமெதுவுமில்லை என கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதனைப் போன்று கச்சத்தீவில் எவ்விதமான முகாம்களும் அமைக்கப்படாதென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்திகளிலும் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு கடற்பரப்பை இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கூட்டாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply