யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் ஐ. தே. கட்சி வேட்புமனு தாக்கல்

யாழ். மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி இன்று (ஜூன் 22) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன தலைமையில் இந்த மனுத்தாக்கல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பிரபல வர்த்தகரான ஏ. ஏ. எஸ். சத்தியேந்திரா ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாநகர சபை தேர்தலில் 29 பேர் அடங்கிய இந்த வேட்புமனுப் பட்டியலில், 28 தமிழர்களும், முஸ்லிம் ஒருவரும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், 4 பெண்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஐக்கிய தேசியக் கட்சி நாளை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply