தலதா மாளிகையில் 19 பொலிஸாருக்கு கொரோனா

கண்டி தலதாமாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  குறித்த பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சில தினங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. 

அதனால் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

பரிசோதனை முடிவில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அவர்களுடன் தொடர்பு பேணிய 231 பொலிஸால் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதுடன் புதிதாக 185 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் யுக்ரேன் சுற்றுலா பயணிகள் தலதா மாளிகைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply