அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கையின் பொருளாதாரம்: தகுதியற்ற வைத்தியரை நிராகரிக்குமாறு ரணில் கோரிக்கை

இலங்கையின் பொருளாதார நோயாளர் சத்திரசிகிச்சையின் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் இன்று (17) நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் “2024 தாதியர் மாநாட்டில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் என்ற நோயாளர் குணமடைய இன்னும் சில வருடங்கள் ஆகும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி குணமடைந்து வரும் நிலையில், தகுதியற்ற வைத்தியரிடம் அந்த நோயாளரை கையளிக்க கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியரின் சான்றிதழை ரத்து செய்யலாம்.

பொருளாதாரத்தை குணப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றாமல் ஓடிய அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply