நாடாளுமன்றத்திற்கு அருகில் விபத்து: இராணுவத்திற்கு சொந்தமானது என தகவல்

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் ரக வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

டிபெண்டர் ரக வாகனம் பெலவத்தையில் இருந்து நாடாளுமன்ற வீதியில் பொரளை நோக்கி பயணித்த போது, வாகனம் தியவன்னாவ சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.

விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.

இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply