வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள்: ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை சியம்பலாண்டுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே மொனராகலை, வெடிகும்புர பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, 02 உயிருள்ள ரவைகள், ஈயப் பந்துகள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட ரவைகளும் இதன்போது மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply