18 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்: இரத்தம் சொட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

கண்டி மாவட்டம் கலஹாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணே தனது 18 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் ஹொரணை பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் அடிக்கடி அவரது கணவருடன் சண்டைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு ஏழு மணியளவில் குழந்தை அழுதுள்ளது.

இதனால் குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய், மூக்கு போன்றவற்றை அழுத்திப் பிடித்து சுவாசிக்க முடியாதவாறு செய்துள்ளார். பின் குழந்தையை தரையில் இறக்கியுள்ளார்.

குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். கீழே விழுந்த குழந்தை எழுந்து சில அடிகள் நடந்து கதவின் அருகின் விழுந்து உயிரிழந்துள்ளது.

இதனை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் அப் பெண் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்து மூன்று மணித்தியாலங்களின் பின்னர் பக்கத்து வீட்டார் வந்து குழந்தையை கலஹா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இம் மரணம் தொடர்பில் கலஹா வைத்தியசாலை பொறுப்பதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட குழு தீவிரம் காட்டியது.

குறித்த இடத்துக்கு வந்த நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

கலஹா பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் தாயை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply